Sunday, November 28, 2010

Wednesday, November 10, 2010

சோனியா தமிழர்களை ஏமாற்ற முடியாது: வைகோ

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா  கடிதம் எழுதியிருப்பதாக கூறுவதால் தமிழர்களை ஏமாற்றிவிட முடியாது .
                        2008 ஆம் ஆண்டிலும், 2009 ஆம் ஆண்டுத் தொடக்கத்திலும், லட்சக்கணக்கான தமிழ் மக்கள், ராஜபட்ச அரசால், இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவில் எங்காவது ஒரு இடத்தில், ஈழத்தமிழர்களைப் பற்றி, ஒரு வார்த்தை சோனியா பேசியது உண்டா?

                     இந்திய அரசின் உதவியால்தான், யுத்தத்தை வெற்றிகரமாக நாங்கள் நடத்த முடிந்தது என்று, இலங்கை அதிபர் ராஜபட்சே, இலங்கை நாடாளுமன்றத்திலேயே அறிவித்தாரே? இந்தியா செய்த ராணுவ உதவியால்தான், புலிகளைத் தோற்கடிக்க முடிந்தது என்று, இலங்கை அமைச்சர்கள் வெளிப்படையாக அறிவித்தார்களே?
        


                  இலங்கையில் தமிழ் இனப் படுகொலை சிங்கள அரசால் நடத்தப்பட்டதற்கு, முழுக்க முழுக்க உதவியது, இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான். இதற்கு முழுக்க முழுக்க சோனியாதான் காரணம் ஆவார்.